Headline

தலைப்புச் செய்திகள்...

உள்ளூர் செய்திகள்

வௌியூர் செய்திகள்

இந்தியச் செய்திகள்

Thursday, March 3, 2016

ads-space

இலங்கை ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள தீர்மானம்


ads-space


இலங்கை நிலக்கண்ணி வெடி தடை தொடர்பான ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவினை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வது குறித்து, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று புதன்கிழமை ஜெனிவாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ads-space fdsfdfs

Related News

No comments:

Post a Comment

இஸ்லாமிய சிந்தனை

தொழில்நுட்பம்

கட்டுரைகள்

மருத்துவப் பகுதி